Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்

—————– இம்முன் இருந்த நிலை இல்லை இப்போது ——————–

meen Ilachchinai
பிறிட்டிறிக் கோட்டை முகப்பு – மையத்தில் மீன் இலச்சினை(தெளிவற்று)- பாவநாசம் தீர்த்தக் குண்டின்மேல் கோயில் இடித்த கற்களைக்கொண்டு கட்டப் பட்டது.

 

பிறட்டிறிக் கோட்டை வாசலில் இடது பக்கத் தூணில், இன்றுங்காணக்கூடியதாக உள்ள பாடல் இது.

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பரங்கி பிடிக்கவே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின்
மானே வடுகாய் விடும்.

-சுப திருஷ்ட முனிவர்.

என்று உளது.

பொருள்

முற்காலத்தில் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணியை, பிற்காலத்தில் பரதேசிகளான பறங்கி இடித்து அழிப்பான். இதற்குப் பின்னர் இந்த சிவசேத்திரத்தை முன் இருந்த நிலைக்குக் கட்டி எழுப்ப மன்னர் பரம்பரை இராது. போர்த்துக்கேயரை பூனைக் கண்ணன் என்றும், ஒல்லாந்தரை செங்கண்ணன் என்றும் பிரித்தானியரை புகைக்கண்ணன் என்றும் பொருள்படும்.

சதுர்வேதி மங்கலம்

நான்கு வேதங்களையும் முறையே கற்று அறிந்த சிவப் பிராமணர்களை, கந்தளாயில் குடி அமர்த்தி, சதுர்வேதி மங்கலம் என்னும் புனிதப் பெயரையும், அந்தப் பிரதேசத்திற்கு இட்டான் குளக்கோட்ட மன்னன், என்ற செய்தியை கற்சாசனம் மூலம் அறிய முடிகிறது. சீன தேசத்தவரான IBAN BATUTA என்பார் 1304 – 1377ல் திருக்கோணேஸ்வரத்திற்கு தரிசனத்திற்காகவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் வந்தபோது சுமார் 1000 பிராமணர்கள் ஆலய சேவையில் இருந்ததாகவும், இரவில் 500 பெண்கள் வரையில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதை நேரில் கண்டதாக கூறியுள்ளார்.

கயவாகு மன்னன்

திருக்கோணேஸ்வரம் பற்றிய நூல்களிலே கயவாகு என்னும் பெயரையுடைய சிங்கள மன்னன் சைவ ஆபிமானம் மிக்கவனாக மதிக்கப் படுகின்றான். “கடல் சூழிலங்கைக் கயவாகு மன்னன்” என்கிறது சிலப்பதிகாரம். குளக்கோட்டன் செய்த திருப்பணிகளைத் தொடர்ந்து, பொலநறுவையை ஆண்ட கயவாகு மன்னன் இந்த சிவசேத்திரத்தை புனருத்தாரணம் செய்தான். கடல் வழியாக வந்து சேர்ந்த அந்தணர்களை, ஆலயத்தில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தான், கயவாகு மன்னன். ஆலயத்திற்கு தேவையான வயல் நிலங்களை வழங்கினான். குளக்கோட்டன் முன்செய்தவாறு, சோழதேசத்திலிருந்து பல குடிகளை அழைத்து வந்து குடியிருத்தினான் கயவாகு மன்னனான்.

போர்த்துக்கேயர் வருகை

நாட்டை ஆளவந்த போர்த்துக்கேயரால், ஆலயம் அழிக்கப்பட இருந்த ஆபத்தை அறிந்த தொழும்பாளர் (இறை தொண்டு செய்தவர்கள்) இந்த சிவசேத்திரத்தில் இருந்த பெறுமதி மிக்க விக்கிரகங்களை, எடுத்துச் சென்று குளங்களிலும், நிலத்தடியிலும் புதைத்து வைத்த செய்தியை கோணேசர் கல்வெட்டு அறியத்தருகிறது. மேலும் ஆலய அழிப்பு நெருங்கியதும், தொழும்பாளர் எஞ்சியிருந்த எழுந்தருளி விக்கிரகங்களை எடுத்துச் சென்று தம்பலகாமம் கோணேசர் ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்தனர். 1624ல் போர்த்துக்கேயத் தலைவன், ஆயிரங்கால் மண்டபத்தையுடைய சிவசேத்திரத்தை இடித்துத் தள்ளி பாவநாசச் சுனையை மூடினான். ஆலயம் அழிக்கப்பட்ட பின்பும்  மாலையில் பூசை இடம்பெற்று வந்தது. பாவநாச தீர்த்தத்தை மூடி, இடித்த சாதிக் கருங்கற்களைக் கொண்டு பிறடறிக் கோட்டையைக் கட்டினர் ஆளவந்தோர். இந்த சிவசேத்திரத்தின் தொன்மையை அறியாத பரதேசிகள், பாடல் பெற்ற பெருந்தலத்தை தகர்த்தனர். ஆலய அழிப்பு விபரத்தை ஆங்கில மொழியின் சிறப்பை பார்ப்போம்.

PORTUGUESE SOLDIERS DRESSED AS PRIESTS BEGAN THEIR IMPERIAL ACTION. THE TEMPLE WAS LEVERED OVER THE EDGE INTO THE SEA (THE TEMPLE OF THOUSAND PILLARS) WAS LITERATELY PUSHED OVER THE ROCKS, INTO THE SEA; WITH ALL THOSE REMAINING BEING MASSACRED. THE FINAL MONUMENTS OF THE TEMPLE COMPLEX WERE DESTROYED TWO YEARS LATER IN 1624. LOOTING WITH GOLD, PEARLS, AND PRECIOUS STONES COLLECTED FOR MORE THAN 1000 YEARS

(visit - https://www.youtube.com/watch?v=PibAqsHTlXY -)

மாதுமையாள் சமேத கோணேசர்

மனிதனுக்கு மன அமைதி தருவது ஆன்மீகம். பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது மதம். திருகோணமலை வாழ் சைவச் சமூகம் 400 வருடங்களாக ஆலயம் அழிந்த நிலையிலும், மாதுமையாள் கோணநாயகர் உள்ளிட்ட ஐந்து விக்கிரகங்கள், திருகோணமலை வாழ் மக்கள் செய்த மாதவத்தால் 27.7.1950ல் திருகோணமலை 10ம் குறிச்சியில் கிணறு தோண்டியபோது தோன்றின. நாலு நூற்றாண்டுகளாக மண்மேவிய நிலையிலும், அகழ்ந்தபோது தோன்றிய பார்வதியின் (திரிபங்க வடிவம்) கழுத்தில் தங்கத்தாலான கம்பியில் கோர்த்திருந்த தாலி எவ்வித பாதிப்புமின்றி இருந்தது ஓர் அற்புதமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.