Thirukoneswaram – திருக்கோணேஸ்வரம்
இப்போதைய கோயில் தோற்றங்கள்
சுவாமி கெங்காதரானந்தா ஜீ
கேரள நாட்டிலிருந்து வந்து துறவு பூண்ட இளைஞன் பல்லாண்டு தவமியற்றி யோக நிலையில் இருந்த திருத்தலம், திருக்கோணேஸ்வரம். இவர்தான் சிவயோக சமாஜம் தாபித்த கெங்காதரானந்தா சுவாமிகள். 1946 தொடக்கம் இந்த சிவசேத்திரத்தில் வெள்ளை உடை தரித்து, ஒதுக்குப் புறமாக ஒதுங்கி இருந்து தியானஞ் செய்வார். சுவாமிக்கு திருக்கோணேஸ்வரம் ஞானாலயமாக இருந்தது.
தொன்மை வாய்ந்த இவ்வாலயம், இடிபாடுகள் இருந்த காலப் பகுதியில், வேதங்கள் இறைவனைத் துதித்தன. திருமுறைகள்தான் நிதம் நிதம் பண் இசைத்தன. 1952ம் வருடத்தில்முன் கிடைத்த திருப் பெருவடிவங்களை சைவப் பெரியார் டாக்டர் பாலேந்திராவின் பெருமுயற்சியால் ஈழத்திருநாடு முழுவதும் (யாழ்ப்பாணம் உட்பட) ஊர்வலமாக பல வாரங்கள் வந்து தரிசனம் தந்த காட்சி எமது நினைவிலுள்ளது. மாதுமையாள் சமேத கோணநாயகர் ஊர்வலம் வந்தபோது, சம்பந்தப் பெருமானின் திருக்கோணேஸ்வரத் திருப்பதிகம், கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது. சைவ மக்களின் தரிசனத்தின்பின் திருகோணமலை உச்சியில் சிறு ஆலயம் அமைத்து சிவ விக்கிரகங்கள் எழுந்தருளப் பெற்றன. 3.4.1963 அன்று முதலாவது திருக்குடமுழுக்கு இடம் பெற்றது. 1990ல் இந்த சிவசேத்திரம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மீண்டும் சேதமுற்று, பூசை வழிபாடுகள் ஏதும் இன்றி நின்றன. சித்தர் திருமூலரால் சிவபூமி என்றழைக்கப் பெற்ற ஈழத் திருநாட்டில், நிரந்தர அமைதியில் மேன்மைகொள் சைவ நீதி நிலைகொள்ள, நிரைகழலரவம் சிலம்பொலியலம்பும் நிமலர் அருள் வேண்டி வணங்குவாம்.
(கிழக்கு)
உசாத்துணை நூல்கள்
- திருக்கோணேஸ்வரம் – கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை வெளியீடு-2014
- தெட்சண கைலாச புராணம் – தல புராணம்
- திருக்கரைசைப் புராணம் – தல புராணம்
- திருக்கோணாசல புராணம் – கோணேசர் கல்வெட்டு
- TRINCOMALIE BRONZES _ DR. W. BALENDRA 1953
- கோணேசர் ஆற்றுப்படை
- திருக்கோணாசல வைபவம்
- கோணமலை அந்தாதி
- செவ்வந்திப் புராணம்