திருமந்திரம்

இது ஒரு திருமந்திரம். திருமூலரால் சொல்லப்பட்டது. A great saint who preached what he practiced. அத்துடன் சாதாரண மனிதனுக்கு மேம்பட்ட உன்னத சக்தி அவரிடம் இருந்தது. அவர் சொன்னதெல்லாம் (யோகா பற்றியும் அட்டமா சித்திகள் பற்றியும் – அவற்றை அடையும் முறையையும் விரிவாக சொல்லியுள்ளார்) நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம். (அதனாலேயே அவர் கூறியதெல்லாம் மந்திரம் எனப்படுகிறது)

ஆர்க்குமிடுமின் அவரிவர் என்னமின்
பார்த்திருந்து உண்மின் பழம் பொருள் போற்றுமின்
வேட்கையுடையீர் விரைந்து ஒன்றை உண்ணமின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே

அவர் சொல்வதன் அர்த்தம்: வீட்டிற்கு எவர் வந்தாலும், அவருடைய முந்தய நிலை எதையும் நினைக்காமல் அவருக்கு உணவளியுங்கள். அடுத்தவர் வருகை பார்த்து உண்ணுங்கள். பழம் பொருளை (இறைவனை) போற்றுங்கள் (உண்ணும்போது). அவசரப்பட்டு உண்ண வேண்டாம். காக்கை கரைந்துண்ணலை கருத்தில் வையுங்கள்.

இதற்கில்லை அது

அன்பிற்கு ஏது?
அளவும் அழிவும்

பண்பிற்கு ஏது?
பகையும் பழியும்

பாசத்திற்கு ஏது?
பகட்டும் பயமும்

நேசத்திற்கு ஏது?
நேரமும் தூரமும்

காதலுக்கு ஏது?
காரணமும் மரணமும்

அழகுக்கு ஏது?
அருவருப்பும் அலட்டலும்

அறிவுக்கு ஏது?
நீளமும் ஆழமும்

உண்மைக்கு ஏது?
பிறப்பும் இறப்பும்

பொய்மைக்கு ஏது?
நிழலும் நிரந்தரமும்

நீதிக்கு ஏது?
விருப்பும் வெறுப்பும்

நிம்மதிக்கு ஏது?
ஆசையும் அகந்தையும்

கோபத்திற்கு ஏது?
பார்வையும் பகுப்பும்

கொடுமைக்கு ஏது?
ஈரமும் இரக்கமும்

காமத்திற்கு ஏது?
வெட்கமும் விவேகமும்

குரோதத்திற்கு ஏது?
கேண்மையும் கருணையும்

வீரத்திற்கு ஏது?
வயதும் பாலும்

தீரத்திற்கு ஏது?
திருட்டும் உருட்டும்

மானத்திற்கு ஏது?
மயக்கமும் தயக்கமும்

மரியாதைக்கு ஏது?
மலிவும் மமதையும்

முட்டாளுக்கு ஏது?
தெளிவும் தைரியமும்

மூர்க்கனுக்கு ஏது?
நெளிவும் சுளிவும்

பக்தனுக்கு ஏது?
சலிப்பும் சந்தேகமும்

சித்தனுக்கு ஏது?
மனமும் இடமும்

பித்தனுக்கு ஏது?
பேதமும் வேதமும்

முக்தனுக்கு ஏது?
இன்பமும் துன்பமும்

சக்திக்கு ஏது?
இடமும் பொருளும்

சிவத்திற்கு ஏது?
ஆதியும் அந்தமும்