விநாயகர் ஸ்தலங்கள் பிற்சேர்க்கை

Part2

பிள்ளையாரின் அவதாரங்கள்:

  1. வக்ரதுண்டன் – மத்சர என்னும் அசுரனை தேவர்கள் வேண்டுதலுக்கிணங்க அடக்குதலுக்காக எடுத்த அவதாரம்.
  2. ஏகதந்தன் – மதாசுரன் என்னும் அசுரனை அடக்குவதற்காக எடுத்த அவதாரம்.
  3. மோஹாதரன் – மோஹாசூரன் என்னும் அசுரனை வழிப்படுத்த எடுத்த அவதாரம்.
  4. கஜானனன் – லோபாசுரன் என்னும் அரக்கனை அடக்க எடுத்த அவதாரம்.
  5. லம்போதரன்.- குரோதாசுரன் என்னும் அசுரனின் வல்லமையை அழிக்க எடுத்த அவதாரம்.
  6. விகட அவதாரம் – காமாசுரனின் அட்டுழியத்தை அழிக்க எடுத்த அவதாரம்.
  7. விக்கினராஜன் – உலகில் தர்மத்தையும் சாந்தியையும் நிலைநாட்ட மாமசுரனின் ஆணவத்தை கழைய அவதாரம். (துன்பங்களை நீக்குதல்)
  8. தூம்தவர்ணன் – அஹங்கசுரனின் ஆதிக்கத்தை அழிக்க எடுத்த அவதாரம்.

* யாவற்றிலும் அசுரத் தன்மையையே (குணத்தை) –(அத்தன்மை கொண்ட ஆளை அல்ல), பிள்ளையார் அழித்தார் என்பதே புராணம்.

தற்காலத்தில் விநாயகர் என்ற சொல்லுக்கு முன்னும் பின்னும் சில ஓட்டுச் சொற்களைச் சேர்த்து விநாயகரின் முக்கியத்துவம் தெரிந்து வழிபாடு நடத்துகின்றனர். இதனால் தவறேதும் இல்லை என்றாலும் விநாயகர் வழிபாட்டின் முக்கியத்துவம் உணர்ந்து வழிபாடு நடப்பதாகவே நாம் கொள்ளலாம்.

தமிழ் நாட்டிலுள்ள முக்கிய விநாயர் ஸ்தலங்கள் part 2

Part 1

மகா கணபதி கோவில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் கணபதி அக்கிரகாரம் என்றொரு சிறு கிராமம் உண்டு. இது ஒரு பிராமணர் குடியிருப்பு. இக்கிராமம் இங்குள்ள மகா கணபதி கோவிலால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவில் அகஸ்திய மாமுனிவரால் ஸ்தாபிக்கப் பெற்று, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பெற்றது. மக்களால் சக்தி வாய்ந்ததாக கருதப் படுகிறது. விநாயகர் சதுர்த்தி காலத்தில் பெரிய அளவில் திருவிழா நடைபெறுகின்றது. திருவிழாக் காலத்தில் வேத விற்பனர்கள் வரவழைக்கப்பட்டு, வேதங்கள் ஓதப் படுகின்றன. ஆண்டுதோறும் ராஜ கோபுர ஸ்தாபன நாளான பால்குட/ஆண்டு விழா பங்குனி அனுஷ தினத்தில் 2009 இலிருந்து அனுட்டிக்கப் பட்டு வருகிறது.

இவ் அக்கிரகாரத்தினுள் ஒரு சிவன் கோவிலும், வரதராஜப் பெருமாள் கோவிலும் திரௌபதி அம்மன் கோவிலும் உண்டு.

சென்னை உள்ளகரத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி கோவில்: உள்ளகரம் எனும் இடம் நங்கநல்லூர்ப் பகுதியில் உள்ளது. உள்ளகரம் என்பது உள்ளே உள்ள அகரம் எனப் பொருள்படும். அகரம் ஓங்காரத்தின் (அ +உ+ம்) தொடக்க ஓசையாகும். மானச ரீதியில் நுட்பமான பொருளை இவ்வூரின் பெயர் தருவதைப் பார்த்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலை ஸ்தாபித்தார். கோவில் கல்வெட்டுகளில் அவரது அருள் மொழிகள் உள்ளன.

  • இதன் பிரகாரத்திலுள்ள 16 கணபதி மூர்த்திகள் (சோதச கணபதி) மிகவும் அரிய சிற்ப வெளிப்பாடுகளாகும்.
  • ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறிவுறுதலுக்கிணங்க இங்கு தினசரி நித்திய கணபதி ஹோமம் இடம் பெறுகின்றது. சங்கிலித்தொடரான இச்சமயச் செயற்பாடு மிகுந்த வலிமையையும் தூய்மையுமுடையது. இக்கோவிலுக்குள் பிரவேசிக்கும் போதே நாம் இதனை உணர முடியும்.
  • தேவி விஜய துர்கா வடதிசையில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. துர்க்கை முன்றலில் கிணறு ஒன்றும் ராஜ விருட்சமும் (அரசமரம்) உண்டு. நேர் கோட்டில் அமைந்துள்ள இச்சேர்க்கையானது மக்களிலுள்ள மிகவும் மோசமான ஜாதக கிரகச் சேர்க்கையையும் இத்துர்க்கை வழிபாடு நன்மையுடையதாக்கும்.
  • இக்கோவிலமைந்துள்ள இடமானது ஆதிகாலத்து பெரும் முனிவர்களின் ஆசிரமமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
  • கோவில் மூலவரின் அருள் பாலிப்பானது பரந்த அளவில் இந்தியாவுள்ளும், உலகெங்கும் நிலை நிறுவப்பட்டுள்ளது.
  • 30 வருடங்களுக்கு மேலாக பல நிறுவனங்கள் கோவில் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.

சென்னையிலுள்ள பிற முக்கிய கோவில்கள் சில:

1.பாடல் பெற்ற ஸ்தலங்கள்

1.1.   மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

1.2.   திருவொற்றியூர் வடிவுடை அம்மன் (தியாகராய சுவாமி) கோவில்.

1.3.   திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்.

  1. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.
  2. திருநீர்மலை ரங்கநாத சுவாமி கோவில்.
  3. மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.
  4. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்.
  5. குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் (குன்றத்தூர் முருகன் கோவில்)
  6. கந்தகோட்டம் கந்தசுவாமி கோயில் (முருகன் கோயில்)-பாரி முனைப் பகுதியில்
  7. பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோவில்.
  8. வடபழனி முருகன் கோவில்.

அருள்மிகு ஸ்ரீ காரிய சித்திக் கணபதி: பஞ்சசெட்டி அஞ்சற்பிரிவு, நத்தம் கிராமம் (சென்னை அஞ்சற் குறியீடு601204)

இது 500-1000 வருட பழைமை வாய்ந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் (சென்னைக் கருகில்) சேர்ந்த கோவிலாகும். புராணப் பெயர் ஏகனைப்பாகம்.

தலச் சிறப்பு:

பிரமன் வழிபட்டு காரியசித்தி அடைந்த இடம் இது. ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்றவை இங்கு பரிகாரம் செய்ய விலகும்.

திருமணத்தடை, கல்வித்தடை, வியாபாரத்தடை போன்றவை இங்குள்ள விநாயகரை வணங்கி சிதறு கைவிட்டு, 16 முறை வலம்வர விலகும். ஸ்ரீவல்லீஸ்வரருக்கு, சோமவாரத்தில் ராகுகாலத்தில் பலாபிசேகம் செய்வித்து ஆலயத்தை 21 முறை வலம் வந்தால் ராகு தோஷம் நீங்கும், பிரதோஷ காலத்தில் கையில் காமாட்சி விளக்கேந்தி பிரதோஷ நாயகருடன் 3 முறை வலம் வர திருமணம் கைகூடும்.அருகே உள்ள கோயில்கள்

·        அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
·       அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்
·        அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
·        அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்
·        அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
·        அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில்

ஸ்ரீ கனிவாங்கிய விநாயகர் (ஸ்ரீ வில்வந்தீஸ்வரர் கோவில்)

இது வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் (திருவல்லம் என்றும் அழைக்கப் படும்) எனப்படும் தனுர்மதியாம்பிகை சமேத ஸ்ரீ வில்வந்தீஸ்வரர் கோவிலைச் சுற்றி அமைந்த, கோவில் நகரத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் ஆகும்.

திருவிளையாடலில் கைலாயத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் மாம்பழத்திற்காக பிள்ளையாருக்கும் முருகனுக்குமிடையிலான போட்டி இங்கு திருவலம் எனும் திருத்தலத்திலேயே இடம் பெற்றதாகக் இங்குள்ளவர்கள் கருதுகிறார்கள். இதனால் இவ்வாலயத்திலுள்ள விநாயகர் கனிவாங்கிய விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

இத்தலம் ‘ஹைந்தவ திருவல்லம்’ என்ற அமைப்பின் இருப்பிடமாகவும் உள்ளது. இந்த அமைப்பு இந்துமதம் தொடர்பான பல  செயல்பாடுகளில் பயபக்தியுடன், சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.

ராஜ ராஜன் சோழ அரசன் காலத்தில் இந்நகரம் சோழருக்கு வடபிரதேசத்துக்கான வாசலாக இருந்தது. இதிலிருந்து இன்றைய ஓசூர், சித்தூர் வரையுள்ள பகுதி தொண்டை மண்டலம் என்றழைக்கப் பட்டு வல்லவராயன் வந்தியத்தேவனால் அரசாளப்பட்டது. வில்வந்தீஸ்வரர் வந்தியத்தேவனின் குலதெய்வமாக இருந்தார்.

வேலூரில் சண்பக விநாயகர்கோவில் என்ற இன்னுமொரு முக்கிய விநாயகர் ஆலயம் உண்டு. வேலூர் பேரூர்ந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் புதிய மேம்பாலம் அருகில் இக்கோவிலுள்ளது.

ஜெகத் குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலில் வழிபட்டு வந்துள்ளார். இங்கு நிராகர சொருபத்தில் விநாயகர் காணப்படுகிறார். விநாயகர் அவரது அவதார தோற்றங்களில் 14 மூர்த்தி வடிவங்களில் வழிபடப்பட்டு வருகின்றார்.

வேலூரிலுள்ள ஏனைய கோவில்கள்:

  • ரத்தினகிரி பால முருகன் ஆலயம்.
  • காங்கேய நல்லூர் முருகர் ஆலயம்.
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில்
  • படைவீடு
  • உத்திர ரங்கநாதர் கோவில், பள்ளிகொண்டா
  • வள்ளிமலை சுப்பிரமணியர் கோயில்
  • அருள்மிகு எல்லை அம்மன் கோவில் வெட்டுவானம்
  • ஸ்ரீ மார்க்க பந்தீஸ்வரர் கோவில் விரிஞ்சிப்புரம்

இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு அடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்களிலும் பல விநாயகர் ஆலயங்கள் உள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விநாயகர் தொன்றுதொட்டு வழிபடப்படுகிறார் அங்கெல்லாம் பல இடங்களில் விநாயகர் கோவில் கொண்டுள்ளார். இன்றோ ஐரோப்பா, அமெரிக்கா அவுஸ்திரேலியா என உலகெங்கும் நம் புலம் பெயர் மக்களைக் காக்க இடங்கொண்டுள்ளார்.

சகல கோவில்களிலும் பிள்ளையார் பரிவார மூர்த்தியாக இருப்பார்.    பெருமாள் கோவில்களில் அனேகமாக விநாயகர் மாத்திரமே பரிவார மூர்த்தியாக உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்விநாயகர்,

விக்கினம் நீக்குபவர்,

வெற்றிதருபவர்,

சக்தி தருபவர்,

சித்தி தருபவர்.

வக்ரதுண்ட மகா காய சூர்யா கோடி சமப்பிரப

நிர்விக்னம் குருமேதேவ சர்வ காரயேசு சர்வதா

Part 3

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய விநாயகர் ஸ்தலங்கள்

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய விநாயகர் ஸ்தலங்கள் part 1
vinayagar

இந்து மதத்தின் சிறப்பு என்னவெனில் அது உயர் மனநிலை எய்தலுக்கு மிகச் சிறந்த மார்க்கமாக இருத்தலே.
எம்முள் உள்ள தெய்வீக யோக சக்தியை மேலோங்கச் செய்வது எம்மை கடவுள் நிலையை அண்மிக்கச் செய்வதாகும். விநாயக தத்துவமும் வழிபாடும் இவ்விலக்கிற்கு எம்மை ஆற்றுப் படுத்துகிறது.
எமது முள்ளந்தண்டடியில் ஒரு அளப்பரிய சக்தி உண்டு. மூலாதார சக்தி என இது குறிப்பிடப்படுகிறது. இந்த சக்தி நெருப்பை ஒத்தது. சிறிது சிறிதாக அது மேலெழுகின்றது. மனக்குவிப்புத் தியானம் மூலம் இச்செயலை சீராக்கலாம். மூளையின் உச்சிவரை மூலாதார சக்தி மேலெழும் செயலை மூலாதாரச் சக்கரம் என்கின்றோம். விநாயகர் வழிபாடு மூலாதாரச் சக்கரத்துடன் தொடர்புடையது. இதன் உச்ச நிலையில் மனிதன் முக்காலமும் அறியக்கூடிய மாமுனிவன் ஆகின்றான்.
எமது சமய கலாசாரத்தில் தோன்றிய வியாசர், பதஞ்சலி முனிவர், திருமூலர் தொடக்கம் சகல நாயன்மார்களும் மட்டுமல்லாமல், பிற மதங்களைச் சார்ந்த மகாவீரர், சௌராஷ்டிரர், புத்தர், ஏசுபிரான், நபிகள் நாயகம் யாவரும் இந்நிலையை அடைந்தவரே. மூலாதார எழுச்சியின் இவ்வியல்பினால் கணபதி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘காணாபத்தியம்’ என்ற சமயப் பிரிவும் உண்டு.
பிள்ளையாரின் நிரந்தர வாசஸ்தலம் முள்ளந்தண்டு முனையிலுள்ள மூலாதாரமே. அதனை முன்னிறுத்துவதுதான் ‘ஓம்’ என்ற மந்திரம். எந்த தெய்வ நாமத்தின் முன்பும் ஓம் சேர்க்கப் படும்போது அது மந்திரமாகிறது. அதாவது எம்மை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும், மிகுந்த பய பக்தியுடன் நாம் செய்யும் உச்சரிப்பு. எனவே சகல தெய்வ வழிபாட்டின் மூலாதாரம் பிள்ளையார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
எந்த தெய்வீக நாமத்தின் முன்பும் ஓம் ஓதுவதுபோல பிள்ளையார் விளங்குவதாலேயே வி-நாயகர் தமக்கு மேல் நாயகர் இல்லாதவர் என்ற பெயர் பெறுகிறார்.
மூலாதாரச் சக்தியினால் எம்மைப் பலப்படுத்தி அதன் மூலம் எமக்கு வரும் சவால்களை சந்திக்கும் ஆற்றல் கிடைக்கச் செய்வதால் அவரை விக்கினம் நீக்குபவர்; விக்கினேஸ்வரர் என்றழைக்கிறோம்.
பிள்ளை யார்? யாருடைய மகன்? சகோதரன்? மருகன்? என்று மட்டும் சொன்னால் போதாது, நாம் என்ன உடலா?, மனமா? புத்தியா? அல்லது அதற்கும் மேலானதா? என்ற விசாரணைக்கு வழி செய்வதால், பிள்ளையார் என்ற பெயர் வருகிறது.
இத்தகைய சிறப்புடைய பிள்ளையாரின் வழிபாட்டை நிலைப்படுத்தும் தமிழ் நாட்டிலுள்ள முக்கிய ஸ்தலங்களைப் பார்ப்போம்.
இங்கு ஸ்தலங்கள் என்று சொல்லி தொன்மை வாய்ந்த சில        கோவில்களே தெரியப்பட்டு தகவல்கள் வெளிக் கொணரப்படுகின்றன. மற்றும்படி விநாயகர் கோவில்கள் முலைக்கு முலை நாம் காணலாம். T ‘ரி’ வடிவ தெரு முகப்பில் ஒரு வீடு இருந்தால் T காலுக்கு எதிரே சுவரில் பிள்ளையார் படமுள்ள மதிற்கற்கள் நாடெங்கும் தென்படும். பல இடங்களில் சிறிய சுவர்ப் பொந்தினுள் சிறு பிள்ளையார் விக்ரகம் வைக்கப்பட்டு பூசையும் நடை பெறுவதுண்டு.

 

Districts of Tamil Nadu
Districts of Tamil Nadu

இந்தியா வரும் எந்த சுற்றுலாப் பயணிக்கும் பிள்ளையார் கோவில் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது திருச்சி உச்சிப் பிள்ளையாரே.
திருச்சியில் இரண்டு மையங்கள் உள்ளன. ஒன்று திருச்சி புகையிரத நிலையம் அமைந்துள்ள திருச்சி ஜங்க்ஷன் (JUNCTION), மற்றது சத்திரம் பேருந்து நிலையம். உச்சிப் பிள்ளையார் கோவில் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள மலை உச்சியில் காணப் படுகிறது. உச்சிக்கு ஏறும் வழியிலேயே மலையில் குடைந்த தாயுமானவர் சிவன் கோவிலுமுண்டு.
இராவணனின் தம்பி விபீஷணனின் நட்பையும் உதவியையும் பாராட்டி இராமன் அவருக்கு அனந்த சயன ஸ்ரீ ரங்கநாத சுவாமி விக்கிரகம் ஒன்றை பரிசாக அளித்தார்; அது வைக்கப்படுமிடத்தில் நிலைபெறும் என்ற அறிவுறுத்தலுடன். விபீஷணன் அதனைக் கொண்டுபோகும் வழியில் சந்தியாவதனம் செய்ய விரும்பினான். அப்பொழுது பிள்ளையார் ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் உருவில் அங்கு தோன்றவே, விபீஷணன் சிறுவனிடம் தான் ஆற்றில் சேமமாகி வரும் வரையில் அவ்விக்கிரகத்தை வைதிருப்பாயா? எனக் கேட்டான். சிறுவனும் ஒத்துக்கொள்ளவே விபீஷணன் விக்ரகத்தை அவனிடம் கொடுத்துவிட்டு ஆற்றில் நீராடப் போனான். சிறுவனோ விக்கிரகத்தை நிலத்தில் வைத்துவிட்டு நின்றான். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனிடம் விக்கிரகம் எங்கே எனக்கேட்க அவனும் நிலத்திலிருந்த ரங்காநாதப் பெருமாள் சிலையைக் காட்டினான். விபீஷணனால் எவ்வளவு முயன்றும் அதனைப் பெயர்க்க முடியவில்லை. (இன்று அதுவே ஸ்ரீரங்கம் கோவில்) கோபங்கொண்ட விபீஷணன் சிறுவனை அடிக்க கையை ஓங்கவே அவன் தப்பி ஓடினான். விபீஷணன் அவனைத் துரத்தவே சிறுவன் அருகில் இருந்த மலையில் ஏறலானான். உச்சிக்குப் போனதும் விபீஷணன் சிறுவனைப் பிடித்து அவனைக் கொட்ட கையை ஓங்கவே சிறுவன் பிள்ளையாராக மாறி விபீஷணனுக்கு அருட்காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் பிள்ளையாரும் நிலை கொண்டார். அதுவே இன்று நாம் காணும் உச்சிப் பிள்ளையார். இதுவும் கீழே அமைந்துள்ள தாயுமானவர் கோவிலும் பின்னர் சோழ அரசர்களால் கோயில்களாக செதுக்கப்பட்டன.
திருச்சியில் உள்ள பிற கோவில்கள்: ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் சிவன் கோவில் இரண்டும் நகரப் பகுதிக்குள் அமைந்துள்ளன. உறையூர் வெக்காளி அம்மன், சமயபுரம் மாரி அம்மன் கோவில், வயலூர் முருகன் ஆலயம் மூன்றும் நகருக்கு வெளியே.

அடுத்து பிரபல்யத்தில் எள்ளளவும் குறைவில்லாத பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும்.
பிள்ளையார் பட்டி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கும் குன்றக்குடிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஓரளவு தூரத்தில், வடகிழக்கில் தஞ்சாவூரும் தென்மேற்கில் மதுரை மாநகரும் உண்டு.
இக்கோவில் ஏக்கத்தூர் கூன் பெரும்பாரணன் என்னும் சிற்பியால் மலைக் குகையை குடைந்து உருவாக்கப்பட்டது. கல்லைக் குடைந்து பொழியப்பட்ட 14 (சிலை) விக்கிரகங்கள் இங்கு உண்டு. கால இடைவெளி விட்டு பின்வந்த சிற்பிகளாலும் செதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டதால் பிள்ளையார் பட்டி ஊரின் பழைய பெயர்களான, எக்கத்தூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, ராஜ நாராயணபுரம் என்ற பெயர்களை இங்குள்ள கற்சிலைகளில் காணலாம். பாண்டிய மன்னரின் ஆதரவில் உருவான இக்கோயில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. நகரத்தார் எனப்படும் செட்டிமார் இக்கோவிலை சுத்தமாகப் பேணி வந்துள்ளனர்.

  • இங்குள்ள பிள்ளையார் விக்கிரகம் 6 அடி உயரமானது. விசேடமாக பிள்ளையாரின் துதிக்கை வலது பக்கம் திரும்பி இருப்பதால் அவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப் படுகிறார். இக்கற்பக விநாயகர் வடக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருக்கிறார்.
  • பரிவார மூர்த்திகளாக திருமணங்களைக் கைகூடச்செய்யும் கார்த்தியாயினி அம்மனும், பிள்ளை வரம் அளிக்கும் நாக லிங்கமும், செல்வத்தை அள்ளிச் சொரியும் பசுபதீஸ்வரரும் விசேடமாக உண்டு.
  • விநாயகர் சதுர்த்தி இங்கு விசேடமான திருவிழாவாகும். 10 நாட்கள் இது நீடிக்கும். சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்னர் காப்புக்கட்டி கொடி ஏற்றத்திருவிழா இடம் பெறும். 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு சார்த்துதல் விசேடமாகும்.
  • 12 மாதங்களும் சதுர்த்தி விரதம் அனுட்டிப்போர் ஆவணிச் சதுர்த்திக்கு –இக்கோவிலுக்கு வருவர்.

 பிள்ளையார் பட்டியைச் சுற்றியுள்ள வேறு கோவில்கள்:

  • குன்றக்குடி முருகன் ஆலயம் 3 km  தூரத்தில்.
  • தென் திருப்பதி 5km தூரத்தில்.
  • வைரவர் கோவில் 2km தூரத்தில்.
  • திருத்தளிநாதர் கோவில்- யோக வைரவர் கோவில்- இவரே ஏனைய வைரவர்களுக்கு மூல வைரவர்.
  • திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் (12km)

Part 2