தமிழ் நாட்டிலுள்ள முக்கிய விநாயர் ஸ்தலங்கள் part 2

Part 1

மகா கணபதி கோவில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் கணபதி அக்கிரகாரம் என்றொரு சிறு கிராமம் உண்டு. இது ஒரு பிராமணர் குடியிருப்பு. இக்கிராமம் இங்குள்ள மகா கணபதி கோவிலால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவில் அகஸ்திய மாமுனிவரால் ஸ்தாபிக்கப் பெற்று, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பெற்றது. மக்களால் சக்தி வாய்ந்ததாக கருதப் படுகிறது. விநாயகர் சதுர்த்தி காலத்தில் பெரிய அளவில் திருவிழா நடைபெறுகின்றது. திருவிழாக் காலத்தில் வேத விற்பனர்கள் வரவழைக்கப்பட்டு, வேதங்கள் ஓதப் படுகின்றன. ஆண்டுதோறும் ராஜ கோபுர ஸ்தாபன நாளான பால்குட/ஆண்டு விழா பங்குனி அனுஷ தினத்தில் 2009 இலிருந்து அனுட்டிக்கப் பட்டு வருகிறது.

இவ் அக்கிரகாரத்தினுள் ஒரு சிவன் கோவிலும், வரதராஜப் பெருமாள் கோவிலும் திரௌபதி அம்மன் கோவிலும் உண்டு.

சென்னை உள்ளகரத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி கோவில்: உள்ளகரம் எனும் இடம் நங்கநல்லூர்ப் பகுதியில் உள்ளது. உள்ளகரம் என்பது உள்ளே உள்ள அகரம் எனப் பொருள்படும். அகரம் ஓங்காரத்தின் (அ +உ+ம்) தொடக்க ஓசையாகும். மானச ரீதியில் நுட்பமான பொருளை இவ்வூரின் பெயர் தருவதைப் பார்த்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலை ஸ்தாபித்தார். கோவில் கல்வெட்டுகளில் அவரது அருள் மொழிகள் உள்ளன.

  • இதன் பிரகாரத்திலுள்ள 16 கணபதி மூர்த்திகள் (சோதச கணபதி) மிகவும் அரிய சிற்ப வெளிப்பாடுகளாகும்.
  • ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறிவுறுதலுக்கிணங்க இங்கு தினசரி நித்திய கணபதி ஹோமம் இடம் பெறுகின்றது. சங்கிலித்தொடரான இச்சமயச் செயற்பாடு மிகுந்த வலிமையையும் தூய்மையுமுடையது. இக்கோவிலுக்குள் பிரவேசிக்கும் போதே நாம் இதனை உணர முடியும்.
  • தேவி விஜய துர்கா வடதிசையில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. துர்க்கை முன்றலில் கிணறு ஒன்றும் ராஜ விருட்சமும் (அரசமரம்) உண்டு. நேர் கோட்டில் அமைந்துள்ள இச்சேர்க்கையானது மக்களிலுள்ள மிகவும் மோசமான ஜாதக கிரகச் சேர்க்கையையும் இத்துர்க்கை வழிபாடு நன்மையுடையதாக்கும்.
  • இக்கோவிலமைந்துள்ள இடமானது ஆதிகாலத்து பெரும் முனிவர்களின் ஆசிரமமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
  • கோவில் மூலவரின் அருள் பாலிப்பானது பரந்த அளவில் இந்தியாவுள்ளும், உலகெங்கும் நிலை நிறுவப்பட்டுள்ளது.
  • 30 வருடங்களுக்கு மேலாக பல நிறுவனங்கள் கோவில் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.

சென்னையிலுள்ள பிற முக்கிய கோவில்கள் சில:

1.பாடல் பெற்ற ஸ்தலங்கள்

1.1.   மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

1.2.   திருவொற்றியூர் வடிவுடை அம்மன் (தியாகராய சுவாமி) கோவில்.

1.3.   திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்.

  1. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.
  2. திருநீர்மலை ரங்கநாத சுவாமி கோவில்.
  3. மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.
  4. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்.
  5. குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் (குன்றத்தூர் முருகன் கோவில்)
  6. கந்தகோட்டம் கந்தசுவாமி கோயில் (முருகன் கோயில்)-பாரி முனைப் பகுதியில்
  7. பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோவில்.
  8. வடபழனி முருகன் கோவில்.

அருள்மிகு ஸ்ரீ காரிய சித்திக் கணபதி: பஞ்சசெட்டி அஞ்சற்பிரிவு, நத்தம் கிராமம் (சென்னை அஞ்சற் குறியீடு601204)

இது 500-1000 வருட பழைமை வாய்ந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் (சென்னைக் கருகில்) சேர்ந்த கோவிலாகும். புராணப் பெயர் ஏகனைப்பாகம்.

தலச் சிறப்பு:

பிரமன் வழிபட்டு காரியசித்தி அடைந்த இடம் இது. ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்றவை இங்கு பரிகாரம் செய்ய விலகும்.

திருமணத்தடை, கல்வித்தடை, வியாபாரத்தடை போன்றவை இங்குள்ள விநாயகரை வணங்கி சிதறு கைவிட்டு, 16 முறை வலம்வர விலகும். ஸ்ரீவல்லீஸ்வரருக்கு, சோமவாரத்தில் ராகுகாலத்தில் பலாபிசேகம் செய்வித்து ஆலயத்தை 21 முறை வலம் வந்தால் ராகு தோஷம் நீங்கும், பிரதோஷ காலத்தில் கையில் காமாட்சி விளக்கேந்தி பிரதோஷ நாயகருடன் 3 முறை வலம் வர திருமணம் கைகூடும்.அருகே உள்ள கோயில்கள்

·        அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
·       அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்
·        அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
·        அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்
·        அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
·        அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில்

ஸ்ரீ கனிவாங்கிய விநாயகர் (ஸ்ரீ வில்வந்தீஸ்வரர் கோவில்)

இது வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் (திருவல்லம் என்றும் அழைக்கப் படும்) எனப்படும் தனுர்மதியாம்பிகை சமேத ஸ்ரீ வில்வந்தீஸ்வரர் கோவிலைச் சுற்றி அமைந்த, கோவில் நகரத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் ஆகும்.

திருவிளையாடலில் கைலாயத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் மாம்பழத்திற்காக பிள்ளையாருக்கும் முருகனுக்குமிடையிலான போட்டி இங்கு திருவலம் எனும் திருத்தலத்திலேயே இடம் பெற்றதாகக் இங்குள்ளவர்கள் கருதுகிறார்கள். இதனால் இவ்வாலயத்திலுள்ள விநாயகர் கனிவாங்கிய விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

இத்தலம் ‘ஹைந்தவ திருவல்லம்’ என்ற அமைப்பின் இருப்பிடமாகவும் உள்ளது. இந்த அமைப்பு இந்துமதம் தொடர்பான பல  செயல்பாடுகளில் பயபக்தியுடன், சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.

ராஜ ராஜன் சோழ அரசன் காலத்தில் இந்நகரம் சோழருக்கு வடபிரதேசத்துக்கான வாசலாக இருந்தது. இதிலிருந்து இன்றைய ஓசூர், சித்தூர் வரையுள்ள பகுதி தொண்டை மண்டலம் என்றழைக்கப் பட்டு வல்லவராயன் வந்தியத்தேவனால் அரசாளப்பட்டது. வில்வந்தீஸ்வரர் வந்தியத்தேவனின் குலதெய்வமாக இருந்தார்.

வேலூரில் சண்பக விநாயகர்கோவில் என்ற இன்னுமொரு முக்கிய விநாயகர் ஆலயம் உண்டு. வேலூர் பேரூர்ந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் புதிய மேம்பாலம் அருகில் இக்கோவிலுள்ளது.

ஜெகத் குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலில் வழிபட்டு வந்துள்ளார். இங்கு நிராகர சொருபத்தில் விநாயகர் காணப்படுகிறார். விநாயகர் அவரது அவதார தோற்றங்களில் 14 மூர்த்தி வடிவங்களில் வழிபடப்பட்டு வருகின்றார்.

வேலூரிலுள்ள ஏனைய கோவில்கள்:

  • ரத்தினகிரி பால முருகன் ஆலயம்.
  • காங்கேய நல்லூர் முருகர் ஆலயம்.
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில்
  • படைவீடு
  • உத்திர ரங்கநாதர் கோவில், பள்ளிகொண்டா
  • வள்ளிமலை சுப்பிரமணியர் கோயில்
  • அருள்மிகு எல்லை அம்மன் கோவில் வெட்டுவானம்
  • ஸ்ரீ மார்க்க பந்தீஸ்வரர் கோவில் விரிஞ்சிப்புரம்

இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு அடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்களிலும் பல விநாயகர் ஆலயங்கள் உள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விநாயகர் தொன்றுதொட்டு வழிபடப்படுகிறார் அங்கெல்லாம் பல இடங்களில் விநாயகர் கோவில் கொண்டுள்ளார். இன்றோ ஐரோப்பா, அமெரிக்கா அவுஸ்திரேலியா என உலகெங்கும் நம் புலம் பெயர் மக்களைக் காக்க இடங்கொண்டுள்ளார்.

சகல கோவில்களிலும் பிள்ளையார் பரிவார மூர்த்தியாக இருப்பார்.    பெருமாள் கோவில்களில் அனேகமாக விநாயகர் மாத்திரமே பரிவார மூர்த்தியாக உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்விநாயகர்,

விக்கினம் நீக்குபவர்,

வெற்றிதருபவர்,

சக்தி தருபவர்,

சித்தி தருபவர்.

வக்ரதுண்ட மகா காய சூர்யா கோடி சமப்பிரப

நிர்விக்னம் குருமேதேவ சர்வ காரயேசு சர்வதா

Part 3