விநாயகர் ஸ்தலங்கள் பிற்சேர்க்கை

Part2

பிள்ளையாரின் அவதாரங்கள்:

  1. வக்ரதுண்டன் – மத்சர என்னும் அசுரனை தேவர்கள் வேண்டுதலுக்கிணங்க அடக்குதலுக்காக எடுத்த அவதாரம்.
  2. ஏகதந்தன் – மதாசுரன் என்னும் அசுரனை அடக்குவதற்காக எடுத்த அவதாரம்.
  3. மோஹாதரன் – மோஹாசூரன் என்னும் அசுரனை வழிப்படுத்த எடுத்த அவதாரம்.
  4. கஜானனன் – லோபாசுரன் என்னும் அரக்கனை அடக்க எடுத்த அவதாரம்.
  5. லம்போதரன்.- குரோதாசுரன் என்னும் அசுரனின் வல்லமையை அழிக்க எடுத்த அவதாரம்.
  6. விகட அவதாரம் – காமாசுரனின் அட்டுழியத்தை அழிக்க எடுத்த அவதாரம்.
  7. விக்கினராஜன் – உலகில் தர்மத்தையும் சாந்தியையும் நிலைநாட்ட மாமசுரனின் ஆணவத்தை கழைய அவதாரம். (துன்பங்களை நீக்குதல்)
  8. தூம்தவர்ணன் – அஹங்கசுரனின் ஆதிக்கத்தை அழிக்க எடுத்த அவதாரம்.

* யாவற்றிலும் அசுரத் தன்மையையே (குணத்தை) –(அத்தன்மை கொண்ட ஆளை அல்ல), பிள்ளையார் அழித்தார் என்பதே புராணம்.

தற்காலத்தில் விநாயகர் என்ற சொல்லுக்கு முன்னும் பின்னும் சில ஓட்டுச் சொற்களைச் சேர்த்து விநாயகரின் முக்கியத்துவம் தெரிந்து வழிபாடு நடத்துகின்றனர். இதனால் தவறேதும் இல்லை என்றாலும் விநாயகர் வழிபாட்டின் முக்கியத்துவம் உணர்ந்து வழிபாடு நடப்பதாகவே நாம் கொள்ளலாம்.